ஆதலினால் கவிதை செய்தேன்...
கல்லாதது கவிதை. கவிதைக்கான இலட்சணங்கள் என்ன என்று இன்னமும் எனக்குத் தெரியாது. யாரிடமும் கவிதை எழுதக் கற்றுக்கொள்ளவில்லை. நேரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு வாழ்க்கையை பிடித்துவிடும் அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும்; எனக்கு கவிதை எழுதுவதும், படிப்பதும்; குளிரில் அலைந்த பின் சூடான தேனீர் குவளையடன் போர்வைக்குள் இளைப்பாறல் போன்றது.